
நீட் தேர்வை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
டெல்லியில் ஜூலை 20 அன்று நடைபெற்ற பேரணியின் போது மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.