
நீலகிரி, தேனி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, ஆகஸ்ட் 25 முதல் 31 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை நீடிக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.