
விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், காவிரி விவகாரத்தில் அரசின் மெத்தனத்தைக் கண்டித்தும் ஆகஸ்ட் 3 அன்று தஞ்சாவூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒத்த கருத்துடைய கட்சிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி, இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்கள் கட்சி பங்கேற்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.