
தூக்கத்தின் போது இயர்பிளக் பயன்படுத்துவது சத்தத்தைக் குறைத்து ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவினாலும், தவறான பயன்பாடு காது பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
தொடர்ச்சியான பயன்பாட்டால் காதுமெழுகு உள்ளே தள்ளப்பட்டு அடைப்பு, காதுவலி மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக ENT மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நுரைப் பொருளால் ஆன இயர்பிளக்குகளை நீண்ட காலம் பயன்படுத்தாமல், அவ்வப்போது மாற்றுவதுடன், காது தொற்று உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.