
23 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 14-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளது.
2027-ம் ஆண்டு ஏப்ரல் 3 முதல் 11 வரை நடைபெறவுள்ள இந்த போட்டிகள் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவர் ஆகிய 3 நகரங்களில் நடத்தப்படுகின்றன.
மொத்தம் 28 விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.