
வடகொரியா தனது கிழக்கு கடற்கரையிலிருந்து ஜப்பானை நோக்கி அதிகாலையில் பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து ஒரு மாதம் நடத்த திட்டமிட்டுள்ள கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்குப் பதிலடியாக இந்த ஏவுகணை சோதனை பார்க்கப்படுகிறது.
ஜப்பானின் அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி, வடகொரியாவின் இந்த நடவடிக்கை பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.