மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக குப்பைகள் மற்றும் பொலித்தீன் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கழிவுநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கியுள்ளதால் மழைநீர் வெளியேற முடியாமல் நுளம்புகள் பெருகி டெங்கு நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.
வியாபாரிகள் கழிவுகளை முறையாக அகற்றாததே இந்நிலைக்குக் காரணம் என மக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதிகாரிகள் நிரந்தரத் தீர்வு காணக் கோரிக்கை விடுத்துள்ளனர்.