
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஓகானகன் ஏரியைச் சுற்றி காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை தொடங்கிய பால்ட் ரேஞ்ச் காட்டுத்தீ சில மணி நேரங்களில் 9,500 ஹெக்டேர் பரப்பளவுக்குப் பரவியுள்ள நிலையில், 100 அடி உயர மரங்களை விழுங்கி 200 அடி வரை தீப்பிழம்புகள் எரிகின்றன.
தீயின் தீவிரத்தால் மின்னல் உருவாகும் வானிலை அமைப்பு ஏற்பட்டுள்ளதால், மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு குடிநீரை கொதிக்க வைத்துப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.