
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நரோவால் மாவட்டத்தில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் ஒன்று மதரஸா கட்டுவதற்காக இடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வழிபாட்டுத் தளம் இடிக்கப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தி, கோவிலைச் சீரமைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியுள்ளது.