
காசாவின் கான்யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் 'நுக்பா' சிறப்புப் படைப்பிரிவு தளபதி முகமது மஹ்மூத் மர்ஷாத் அல்-காடி கொல்லப்பட்டார்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இவர் தலைமை தாங்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஹமாஸின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு தலைவர் முயின் அல்-அரபித் இஸ்ரேலிய படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.