/polimer-news/media/media_files/2026/09/17/ministerctrnirmalkumar-2026-09-17-14-53-26.jpg)
மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தின் போது தரிசனத்திற்கு அனுமதிக்கக் கோரி மாட வீதிகளில் கூடியிருந்த பக்தர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக அங்கு வந்த அமைச்சர் நிர்மல்குமார், ஒரே நேரத்தில் அனுமதித்தால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால்தான் காவல் துறை தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி அவர்களை அமைதிப்படுத்தினார்.
அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பொது தரிசனத்திற்கு முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கோயிலுக்கு வரும்போது அனைவரும் மீதும் ட்ரோன் மூலம் தீர்த்தம் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்கள் விளக்கமளித்தனர்.