
தூத்துக்குடி அருகே ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பிரியாவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த வழக்கில் தட்டாரமடம் காவல் நிலைய காவலர் முத்துக்குமார் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்காதல் விவகாரத்தை பிரியா கண்டித்ததால் ஆத்திரமடைந்த 33 வயதான முத்துக்குமார், கடையை பூட்டிக்கொண்டிருந்தபோது அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.
ஏற்கனவே மாமனார் உள்ளிட்ட இருவரை வெட்டிய வழக்கில் ஜாமீனில் வெளியே வந்திருந்த முத்துக்குமார், தற்போது இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.