
இந்தோனேசியாவின் மடுரா தீவு அருகே 271 பயணிகளுடன் சென்ற கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் 41 பயணிகளைக் காணவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூர்யபயா நகரிலிருந்து தெற்கு சுலைவெஸி நோக்கிச் சென்ற கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.