
பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள விவசாயிகள் ஆவின் சொசைட்டிக்கு பால் ஊற்றுவதைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளில் பால் கொள்முதல் விலை 7 ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ள நிலையில், மாட்டுத் தீவனங்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு 52 ரூபாய் வழங்கும் நிலையில், ஆவின் நிறுவனமும் விலையை உயர்த்த வேண்டும் அல்லது மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.