டெல்லியில் நடந்த பேரணியின்போது போலீஸ் தாக்குதல் மற்றும் அயோத்தி ராமர் கோயில் நிதி முறைகேடு விவகாரங்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டதால், சபாநாயகர் ஓம் பிர்லா அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார்.
மாநிலங்களவையில் நிதி முறைகேடு குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.