
கேரளாவில் புதிய வீட்டின் கிரகப்பிரவேச அழைப்பிதழை வழங்கச் சென்ற நபர், உறவினர் வீடு பூட்டியிருந்ததால் சிசிடிவி கேமரா முன் நின்று பாட்டு பாடி அழைப்பு விடுத்தார்.
பரிசுப் பொருட்கள் வேண்டாம், கடன் சுமை இருப்பதால் மொய்ப் பணமாகத் தாருங்கள் என அவர் நகைச்சுவையாகக் கேட்டுக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
வீட்டின் உரிமையாளர்கள் சிசிடிவி காட்சிகளைப் பார்த்துவிட்டு அதனை இணையத்தில் பகிர்ந்ததால் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.