
இந்திய வங்கியாளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த கூகுளின் ஃபயர்பேஸ் (Firebase) தளத்திலுள்ள 57 போலி இணையதளங்கள் மற்றும் தரவுத்தளங்களை முடக்குமாறு இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) கேட்டுக்கொண்டுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற முன்னணி வங்கிகளைப் போல போலியாக உருவாக்கி, 2025-ஆம் ஆண்டில் இந்தியர்களின் 2.4 பில்லியன் டாலர் பணத்தை மோசடி செய்ய இந்த தளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசின் பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் 4 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 2,000 ரூபாயைப் பெற்றுத் தருவதாகக் கூறி, விவசாயிகளின் கைபேசிகளை ஹேக் செய்ய இந்த போலிச் செயலிகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.