
அமெரிக்கா - சீனா இடையேயான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இதர தயாரிப்புகளின் உற்பத்தியை சீனாவிலிருந்து வெளியேற்றத் திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் பிக்சல் போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் இயர்பட்ஸ் உற்பத்தியை மாற்றுமாறும், 2027-க்குள் ஒட்டுமொத்த தயாரிப்பையும் சீனாவிலிருந்து வெளியேற்றுமாறும் சப்ளையர்களை கூகுள் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவின் பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் கூகுள், தனது பிக்சல் உற்பத்தியை இந்தியா மற்றும் வியட்நாமில் அதிகரிப்பது நாட்டின் வேலைவாய்ப்புகளை உயர்த்த உதவும்.