
அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து நடத்தவிருந்த 'பிரீடம் ஷீல்டு' என்ற 11 நாட்கள் போர் பயிற்சியின் கால அளவை அமெரிக்க அதிபர் டிரம்ப் குறைத்த போதிலும், வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங், பயிற்சியின் கால அளவு குறைக்கப்பட்டாலும் அதன் ஆக்ரோஷமான தன்மை மாறாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு கடல் பகுதி அருகே வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ஜப்பான் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இது சர்வதேச அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.