
நாரா புயலால் ஏற்பட்ட கனமழையால் வியட்நாமின் வடக்கு பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியிருந்த 4,300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.