பாங்காக் நகரில் வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த மீன் தொட்டியில் வண்ண மீன்கள் தொடர்ந்து இறந்து வந்ததைத் தொடர்ந்து, வீட்டு உரிமையாளர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தார்.
சுத்திசாய் என்ற 51 வயது நபர் நிர்வாணமாக மீன் தொட்டியில் இறங்கி மீன்களைப் பாலியல் வன்கொடுமை செய்தது சிசிடிவி மூலம் தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் அந்த நபரைத் கைது செய்து, விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.