எஸ்பிஐ வங்கியின் சர்வர் மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் கூகுள் பே, போன்பே மற்றும் YONO செயலி உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகள் இன்று முடங்கின.
வாடிக்கையாளர்களின் சிரமத்தைப் போக்க தொழில்நுட்பக் குழு சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், மதியம் 12:30 மணிக்குள் சேவைகள் சீராகும் என வங்கி உறுதியளித்துள்ளது.
சேவை முடங்கியுள்ள நேரத்தில் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டுகள் அல்லது ரொக்கப் பணத்தைப் பயன்படுத்த வங்கி அறிவுறுத்தியுள்ளது.