
பாலிவுட் நடிகை கீர்த்தி குல்ஹாரியின் கடன் அட்டையைப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் ரூ.2.44 லட்சத்தை மோசடி செய்துள்ளனர்.
ஜூலை 24-ம் தேதி வெளிநாட்டுப் பரிவர்த்தனை நடந்ததாக வங்கி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, நடிகை தனது கடன் அட்டையை முடக்கினார்.
இந்தச் சம்பவம் குறித்து மும்பை அம்போலி போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.