
நடிகர் ரவி மோகன் தான் இயக்கியுள்ள முதல் படமான 'An Ordinary Man'-ன் சில காட்சிகளை தனது குடும்பத்தினருக்குக் காட்டிய அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தனது தந்தை அளித்த உற்சாகமான ஆதரவுக்காக நெகிழ்ச்சி தெரிவித்த அவர், உலகின் ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரிடமிருந்து இத்தகைய ஆதரவைப் பெற வேண்டும் எனப் பிரார்த்தித்துள்ளார்.
ரவி மோகன் நடிப்பில் அடுத்ததாக 'கராத்தே பாபு' படம் வெளியாகத் தயாராக உள்ள நிலையில், அவர் இயக்குநராக அறிமுகமாகும் 'An Ordinary Man' படமும் விரைவில் வெளியாகவுள்ளது.