
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் தேர்வான ஆறு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க கட்சியில் இணைந்தனர்.
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடுவது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல் என்றும், இது ஒரு கேலிக்கூத்தான செயலாகும் என்றும் உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
சட்ட நடைமுறைகளின்படி இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்க வழி இல்லை என்று தெரிவித்த நீதிமன்றம், இதுபோன்ற விவகாரங்களில் தேர்தல் ஆணையம் உரிய வழிமுறைகளை வகுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.