-558031_850x460.jpg)
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,838 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு பாதிப்பால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாகப் பதிவாகியுள்ளது.
அபாயம் மிக்க 172 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதில், அதிக பாதிப்புள்ள 63 பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.