
காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,515 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,642 ஆகவும் அதிகரித்துள்ளது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத்துறை திணறி வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு 16,000 தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.
எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகக் கருதப்படுவதால், மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.