
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வீட்டின் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் புதிய போட்டி நடைபெற்றது.
போட்டியின் போது சக போட்டியாளர் லட்சுமி பிரியா தள்ளியதால், நடிகை ஆனந்தி நிலைகுலைந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்து வலியால் அழுது துடித்தார்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் எல்லை மீறி நடக்கும் போட்டியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், லட்சுமி பிரியாவுக்கு ரெட் கார்டு வழங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.