/nakkheeran/media/media_files/2026/09/18/mamatarahul-2026-09-18-10-45-31.jpg)
மேற்கு வங்கம் மாநிலத்தில் காலியாக உள்ள நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
உட்கட்சி பூசல் காரணமாக மம்தா பானர்ஜி மற்றும் ரிதப்ரா பானர்ஜி ஆகிய இரு அணிகளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
கட்சியைப் பிளவுபடுத்த பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோர்ப்பதாகக் கூறி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.