
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக கோவை, தேனி, திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 8-ம் தேதி தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சென்னை கொட்டவாக்கத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழையும், இதர பகுதிகளில் லேசான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.