
திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள மேல இலந்தை குளம் பகுதியில் நான்கு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஆபிரகாமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கங்கைகொண்டான் போலீசாரால் கைது செய்யப்பட்ட 50 வயதான மத போதகர் ஆபிரகாம் மீதான இந்த வழக்கை விசாரித்த திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கினார்.
பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக இந்த மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறப்பு நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.