
பிரித்தானியாவின் லண்டனில் உள்ள தேசிய நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவமனையில், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 48 வயது நபரின் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
இந்த AI தொழில்நுட்பம் அறுவை சிகிச்சையின் போது மூளையின் நேரலைக் காட்சிகளைப் பகுப்பாய்வு செய்து, இரத்த நாளங்கள் மற்றும் பார்வை நரம்புகளைத் துல்லியமாக அடையாளம் காட்டியது.
லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியால் உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், நூற்றுக்கணக்கான அறுவை சிகிச்சைக் காணொளிகளைப் பயன்படுத்திப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.