
இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட 9 ராமேஸ்வரம் மீனவர்களை மீட்பதில் அரசு மெத்தனம் காட்டுவதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதாகக் கூறியவர்கள், தற்போது மத்திய வெளியுறவு அமைச்சருக்குக் கடிதம் எழுதுவதுடன் கடமையை முடித்துக்கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
மீனவர் பிரச்னையில் இரட்டை வேடம் போடாமல், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.