
பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் கடந்த ஓராண்டில் 20% முதல் 25% வரை வருமானம் கொடுத்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் லாபத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த ஆலோசனைகள் வெளியாகியுள்ளன.
முதலீட்டு நிபுணர்கள், இலக்கு ஒதுக்கீட்டிலிருந்து சொத்து மதிப்பு 5% அல்லது அதற்கு மேல் விலகல் ஏற்பட்டால், லாபத்தைப் பாதுகாப்பான கடன் திட்டங்களுக்கு மாற்றி சமநிலைப்படுத்த (Re-balance) பரிந்துரைக்கின்றனர்.
முதலீட்டாளர்கள் தங்களின் நிதி இலக்கு, வயது மற்றும் குடும்பப் பொறுப்புகளைக் கருத்தில் கொண்டு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை முதலீட்டைப் பரிசீலிப்பது அவசியமாகும்.