
2018-ல் வெளியான 'பத்மாவத்' திரைப்படத்தில் ராணி பத்மாவதி தீயில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் காட்சி குறித்து ஸ்வரா பாஸ்கர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெண்களைக் கோழைகள் என்று தான் கூறவில்லை என்றும், உயிர் முக்கியம் என்பதை வலியுறுத்தியே தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் மற்றும் சாகித் கபூர் நடிப்பில் வெளியான இப்படம் பெரும் விவாதங்களை உருவாக்கியிருந்தது.