
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சிறப்பு வைப்புநிதி திட்டத்தின் மூலம் ஆகஸ்ட் 31 வரை 127.23 பில்லியன் டாலர் முதலீடு திரட்டப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நாணய கடன்களையும் சேர்த்து மொத்தம் 136.38 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 12.89 லட்சம் கோடி) இந்திய வங்கித்துறைக்கு கிடைத்துள்ளது.
இந்த முதலீட்டு வரவால் ஆர்.பி.எல். வங்கி 5.10 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி 1.37 சதவீதமும் உயர்வு கண்டன.