
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குறுகிய காலத்தில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல் என்று நீதிபதிகள் விமர்சித்தனர்.
இதுபோன்ற செயல்களைத் தடுக்க தேர்தல் ஆணையம் உரிய வழிமுறைகளையும் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.