
சென்னை வண்ணான்துறையில் தவெக நிர்வாகி கண்ணன், அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை வழக்கில் பரணி, ராகேஷ், நரேஷ், மணிகண்டன் மற்றும் ஹரிஹரன் ஆகிய 20 வயதுடைய 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
சம்பவத்தை தடுக்க தவறிய சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் ரோகினி மற்றும் அடையாறு துணை ஆணையர் கார்த்திகேயன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.