
பிரசாத் ஃபிலிம் லேபின் தொழில்நுட்ப தலைவர் எஸ். சிவராமன் நேற்று உடல்நலக்குறைவால் மறைந்தார், அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கருப்பு வெள்ளை முதல் டிஜிட்டல் வரை சினிமா தொழில்நுட்ப மாற்றங்களில் பெரும்பங்களிப்பாற்றியவர் சிவராமன், பிராசஸிங் மற்றும் கலர் கரெக்ஷன், ஒலித் தொழில்நுட்பத்திற்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்தவர்.
தன் வாழ்நாளில் ஒவ்வோர் ஆண்டும் தோராயமாக 500 படங்களையேனும் ஒலியே இல்லாமல் பார்த்திருப்பார் என கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.