
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் நிதிநிலை அறிக்கையில் இல்லாத புதிய திட்டங்களை முதல்வர் அறிவிப்பதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 17 முதல் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பு சுமார் ரூ.73,900 கோடி என்றும், ஆண்டுதோறும் ரூ.10,720 கோடி கூடுதல் செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவாதங்கள் இன்றி இத்தகைய அறிவிப்புகளை வெளியிடுவது மக்களாட்சிக்கு எதிரானது என்றும், கடன் சுமையை இது அதிகரிக்கும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.