
தெற்கு உள் கர்நாடகாவிலிருந்து மன்னார் வளைகுடா வரை தமிழகத்தின் வழியாக நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் சில மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் செப்டம்பர் 15ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.