கடந்த 3 ஆண்டுகளாக துபாய், ஜெட்டா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலம் இந்த ஆண்டு மீண்டும் இந்தியாவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
அதிக திருமண சீசன் காரணமாக ஏலம் நடத்துவதற்கான அரங்கம் கிடைப்பதில் சிக்கல் இருந்ததாக ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்தார்.
அடுத்த சீசனுக்கான ஏலம் சிறியதாகவே இருக்கும் என்பதால் இந்தியாவிலேயே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.