
அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் நோவக் ஜோகோவிச் தோல்வியடைந்து வெளியேறினார்.
முதல் செட்டை 6-2 என ஜோகோவிச் கைப்பற்றிய நிலையில், அர்ஜென்டினாவின் தியாகோ கஸ்டின் டிரண்டே அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று வெற்றி பெற்றார்.
ஆகஸ்ட் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில் இருந்து முன்னணி வீரரான ஜோகோவிச் 2-வது சுற்றிலேயே வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.