
கஜினி, வீரம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துப் புகழ்பெற்ற நடிகர் பிரதீப் ராவத், ரத்தப் புற்றுநோய் பாதிப்பால் தனது 74-வது வயதில் மும்பையில் காலமானார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த இரண்டு மாதங்களாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆகஸ்ட் 4 மாலை உயிரிழந்தார்.
1952-ல் பிறந்த இவர், பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம் தொடரில் அஸ்வத்தாமனாக அறிமுகமாகி, தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.