
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தவெக அரசின் முடிவை கைவிட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
புதிய தலைமைச் செயலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட பட்டினப்பாக்கம் பகுதி அதிக மக்கள் தொகை, குறுகிய சாலைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் கொண்டது என அவர் சுட்டிக்காட்டினார்.
மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் இந்த முடிவை முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தினகரன் கேட்டுக்கொண்டார்.