
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 1,800 நடத்துநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க உத்தரபிரதேச நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் இருக்கும்போது வடமாநிலத்தவர்களை நியமிப்பது கண்டனத்திற்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்களையே ஓட்டுநர்களாகவும் நடத்துநர்களாகவும் நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும் என அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.