மதுராந்தகம் அருகே நடுபழனி மலைக்குன்றில் உள்ள ஸ்ரீ மரகத பாலதண்டாயுதபாணி முருகன் கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத சிலை கொள்ளையடிக்கப்பட்டது.
மூலவர் சன்னதியில் இருந்த 3 இரும்பு கதவுகளின் அலார எச்சரிக்கை மணியைத் துண்டித்துவிட்டு, மர்ம நபர்கள் சிலையைத் திருடிச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் குறித்து சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலை கொள்ளையர்களைப் பிடிக்க மாவட்ட எஸ்பி ஐமன் ஜமால் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.