
தைவானில் நடக்கும் தைபே ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில், இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இதே தொடரில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ்.பிரனாய், ஹாங்காங்கின் ஜேசன் குணவானிடம் 9-21, 19-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
கிரண் ஜார்ஜ் காலிறுதிச் சுற்றில் தனது அடுத்தகட்டப் போட்டியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார்.