
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 77-லிருந்து 110-ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், கிளைக்கழகச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது 45 என நிர்ணயிக்கப்பட்டு, அவர்கள் இரண்டு முறை மட்டுமே அப்பதவியை வகிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளராக ஒருவர் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் என்ற புதிய விதிமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.