செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களின் அதீத தேவையால் உலகம் முழுவதும் மெமரி சிப்களின் விலை கடந்த 12 மாதங்களில் 500 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வு காரணமாகத் தாங்கள் கடுமையான வணிக சவால்களைச் சந்தித்து வருவதாக சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் தளத்தில் கவலை தெரிவித்துள்ளார்.
மெமரி சிப் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஐடி சேவை நிறுவனங்களின் செயல்பாட்டைப் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.